அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி (OSA) திட்டம் மற்றும் பால் பண்ணைத் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் குறித்த குறிப்புகள் பரிமாற்றத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசொமதா மற்றும் இலங்கை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோரின் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
இலங்கைக்கான ஜப்பானின் முதல் OSA பாதுகாப்பில் இருதரப்பு ஒத்துழைப்பு ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்பதைக் குறிக்கிறது. 2023 இல் தொடங்கப்பட்ட OSA ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் பாதுகாப்பு மற்றும் தடுப்பு திறன்களை வலுப்படுத்த ஜப்பானின் புதிய மானிய உதவி ஒத்துழைப்பு கட்டமைப்பாகும். வளரும் நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அதிகாரபூர்வ மேம்பாட்டு உதவி (0DA)யிலிருந்து வேறுபட்டு, ஆயுதப் படைகள் ஒரு பெறுநராக இருக்க OSA உதவுகிறது.

இந்த OSA திட்டத்தின் கீழ், 500 மில்லியன் யென் (அண்ணளவாக 1 பில்லியன் ரூபா) தொகையில் அவதானிப்பு, கண்காணிப்பு மற்றும் பேரிடர் நிவாரணத்திற்காக இரண்டு வகையான அதிநவீன ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV-கள்) இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்படும். இந்தத் திட்டம் இலங்கையின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பால் பண்ணைத் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான மானிய உதவித் திட்டத்தின் கீழ், 463 மில்லியன் யென் (தோராயமாக 945 மில்லியன் ரூபா) தொகையில், நிகழ்நேர பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (PCR) உபகரணங்கள், விந்து இயக்கம் பகுப்பாய்வு அமைப்பு மற்றும் நான்கு சக்கர டிராக்டர் போன்ற உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவை மத்திய மாகாணம், வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், வட மத்திய மாகாணம் மற்றும் வடமேற்கு மாகாணத்தில் உள்ள கால்நடை வசதிகளுக்கு வழங்கப்படும்.
இந்தத் திட்டம் பால் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதையும், அதன் மூலம் இலங்கையில் உள்ள சிறு அளவிலான பால் விவசாயிகளின் மேம்பட்ட வாழ்வாதாரத்தின் மூலம் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மைல்கல் திட்டங்கள் இலங்கையை ஆதரிப்பதற்கான ஜப்பானின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், ஜப்பானுக்கும் – இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வளர்ப்பதற்கும் பங்களிக்கின்றன.

















