தனியார் காணியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தக் குண்டுகள் நேற்று கிளிநொச்சி – இயக்கச்சியில் மீட்கப்பட்டுள்ளன.
இயக்கச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய காணியில் துப்புரவுப் பணியை மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த காணிக்குள் குண்டுகள் காணப்படுவதை அவதானித்தார்.
சம்பவம் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டபோது சம்பவ இடத்திற்கு உடனடியாக மருதங்கேணி காவல்துறையினர் விரைந்து சென்று குறித்த பகுதியில் பாதுகாப்பினை பலப்படுத்தினர். இன்றைய நீதிமன்ற அனுமதியின் பின் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

















