செம்மணியில் அடித்து உடைக்கப்பட்ட ‘அணையா விளக்கு’ தூபியை மீண்டும் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி விசாரணை கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ‘அணையா விளக்கு’ போராட்டம் அண்மையில் நடத்தப்பட்டது.
போராட்டத்தின்போது அங்கு அணையா விளக்கு நினைவுத் தூபி அமைக்கப்பட்டது.

















