கரவெட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.















