-கலையமுதன்-
ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தையொட்டி மயிலிட்டி பகுதியில் கூடிய வலி,வடக்கு காணி உரிமையாளர், ஊடகவியலாளர்களை பொலிஸார் விரட்டியடித்துள்ளனர்.
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் அபிவிருத்தி பணிக்கான அடிக்கலை நாட்டிற்காக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வருகைதந்தார்.
இதன்போது அப்பகுதியில் கூடிய காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் அப்பகுதியில் நிற்க விடாமல் விரட்டியடிக்கப்பட்டனர்.
பொலிஸார் வயோதிபர்கள் எனவும் பாராது போராட்டக்காரர்களை தூஷண வார்த்தைகளை பேசி முதுகில் பிடித்து தள்ளினர்.
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு ஜனாதிபதி அனு குமார திஸாநாயக்க மயிலிட்டிக்கு வருகை தந்திருந்தார்.
கடந்த காலங்களில் ஜனநாயகம் பற்றி அதிகம் பேசிய அனுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியிலும் கடந்த காலங்களை போன்று மூர்க்கத்தனமாக செயற்பட்டமை
அங்கிருந்தவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியது.



















