-பா.பிரதீபன்-
நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் எடுத்து வரப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நெடுந்தீவில் அமைந்துள்ள பரீட்சை மையத்திலிருந்து இலங்கை விமானப்படையினரால் நேற்று விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டது.















