யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் 600 கிலோ கிராம் கஞ்சா அழிக்கும் நடவடிக்கை நேற்று இடம்பெற்றது.
பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட 600 கிலோ கிராம் கஞ்சாவே இவ்வாறு அழிக்கப்பட்டது.
பருத்தித்துறை நகரசபைக்குச் சொந்தமான வெலிக்கண்டி குப்பை திடலில் வைத்து, கஞ்சா தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டது.


















