-இ.கலைஅமுதன்-
மாவிட்டபுரம் இந்து மயானத்தை அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்ட பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் ஆ.உதயசங்கரின் ஏற்பாட்டில், மாவை பாரதி சனசமூக நிலையத்தின் ஒழுங்கமைப்பில், இந்த அபிவிருத்திப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் மயான முகப்பு வளைவு மற்றும் இளைப்பாறு மண்டபம் ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வலி வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் வலி. வடக்கு பிரதேசசபை செயலாளர் சி.சிவானந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
















