யாழ்ப்பாணம் – கோண்டாவில் சந்திக்கு அருகாமையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கரப்பான் பூச்சியுடன் உணவு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குடும்பம் ஒன்று நேற்றையதினம் குறித்த உணவகத்துக்கு உணவருந்த சென்றனர். இவ்வாறு சென்றவர்களுக்கு வழங்கிய நூடில்ஸில் கரப்பான்பூச்சி இருப்பது அவதானிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த விடயத்தை ஹோட்டல் பணியாளர்களுக்கு எடுத்துக் கூறியபோது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


















