யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை உயிர்மாய்த்துள்ளார்.
உடுவில், மல்வம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய தவராசா ஜெயசுதன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் இதற்கு முன்னரும் ஒரு தடவை உயிர்மாய்க்க முற்பட்டதாக அறியமுடிகிறது.
இந்நிலையில் நேற்றையதினம் கிணற்றி விழுந்து உயிர்மாய்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















