-கஜிந்தன்- , -செ.ரவிசாந்-
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலராக நியமிக்கப்பட்ட திருமதி. சிவகாமி உமாகாந்தன் நேற்று திங்கட்கிழமை அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.
இவர் கடந்த ஆறு வருட காலமாக கரவெட்டி உதவிப் பிரதேச செயலராக கடமையாற்றியிருந்தார். இவர் நேற்று யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.















