-கஜிந்தன்-
சட்டவிரோதமான முறையில் பணத்தை சேகரித்த சுன்னாகம் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், அவர்கள் சட்ட விரோதமாக ஈட்டிய பணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

















