மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 டிப்பர்கள் மற்றும் 2 உழவு இயந்திரங்கள் என்பவற்றை மூதூர் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைப்பற்றி உள்ளனர்.
அத்துடன், குறித்த வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹாவலி கங்கை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக மூதூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இக் கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட வாகனங்களின் சாரதிகளை மூதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மேலதிக விசாரணைனகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


















