-பா.சதீஸ்-
முல்லைத்தீவில் கடல் சீற்றம் தற்போது குறைவடைந்துள்ள நிலையில், கடலலை அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையினால் அதிக காற்றுடன் கூடிய மழை கிடைக்கப் பெற்றுள்ளது. இதன்போது கடலலையின் சீற்றம் அண்ணளவாக 10 அடிக்குமேல் உயர்ந்து கடல் எது, கரை எது எனத் தெரியாத அளவுக்கு அதிகரித்து காணப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது முன்னைய நாட்களை விட காற்றின் அளவும் மழையும் குறைவடைந்ததனால் முல்லைத்தீவு கடற்கரையின் சீற்றம் சற்று குறைவடைந்து செல்வதுடன் கடலலை கூடுதலாக இருக்கின்றது.
















