யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் இருந்து தப்பியோடிய இளைஞன் ஒருவன் ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்வதற்கு நீண்ட நாட்களாக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த நிலையில் இளைஞன் தொடர்ந்து தலைமறைவாக இருந்துள்ளான்.
இந்நிலையில் கடந்த முதலாம் திகதி நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் இளைஞன் பதுங்கி இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்ய முற்பட்ட வேளை, இளைஞன் பொலிஸாரிடம் இருந்து தப்பித்து, ரயில் பாதையைக் கடந்து ஓட முற்பட்ட வேளை ரயிலில் மோதுண்டு மோதி படுகாயமடைந்துள்ளான்.
படுகாயமடைந்த இளைஞனை பொலிஸார் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்று செவ்வாய்க்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.


















