அரிசி விலையை அதிகரிக்கும் நோக்கில் அரிசிக்குச் செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தச் சிலர் முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தேசிய விவசாயிகள் ஒற்றுமை அமைப்பின் தலைவர் அநுராத தென்னகோன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படும் என வெளியான வதந்திகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு நெல் கொள்வனவு செய்த உரிமையாளர்களே அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

















