யாழ்ப்பாணம் – திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து அம்பாளுக்கான இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் ஆலய தர்மகர்த்தாக்கல், அடியவர்கள் கலந்து இராஜ கோபுரத்திற்காக அடிக்கல்லினை நாட்டினர்.
ஆலயத்தில் பாலஸ்தானம் இடம்பெற்று, ஆலய புனரமைப்பு வேலைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

















