-கஜிந்தன்-
சங்குவேலியில் இடி மின்னல் தாக்கத்தால் தேவாலயம் ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/187 சங்குவேலி கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயமே நேற்றிரவு பாதிக்கப்பட்டது.
இந்த இடி மின்னல் தாக்கத்தால் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை எனப் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
















