-மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தல்-
மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கரவண்டி யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டது. மிக நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட, இந்த மின்சார முச்சக்கரவண்டி மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.
கருடன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஆற்றலை அடிப்படையாகக் கொண்ட இவ்வகை வாகனங்கள், எதிர்கால போக்குவரத்துத் துறையில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளன.
பசுமை ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில்,யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் முக்கியமான முன்னேற்ற முயற்சியாக இது அமைந்துள்ளது. புதிய தயாரிப்பை பார்வையிட பலரும் ஆவலுடன் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


















