-கஜிந்தன்-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில் 3, 252 பேர் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்.
கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகிய இந்த நான்கு நாள் பட்டமளிப்பு விழா 12 அமர்வுகளாக நடைபெற்றது.
இந்த முறை பட்டமளிப்பு விழாவின் போது, 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
மேலும் 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களுடன் ஒருவருக்கு வியாபார நிர்வாகத்தில் சான்றிதழ் அடங்கலாக 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்.
அத்துடன் மருத்துவ பீடத்தில் ஒருவர் எட்டு தங்கப் பதக்கங்களையும், முகாமைத்துவ பீடத்தில் ஒருவர் ஏழு தங்கப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டதுடன், விழிப்புலனற்ற முவரும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.


















