-இ.கலைஅமுதன்-
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுடன் இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஷ் கலந்துரையாடல் நடத்தினார்.
யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதி யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டிடத் தொகுதிக்கு விஜயம் செய்து அங்கு வைக்கப்பட்டுள்ள செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்கூட்டு தொகுதிகளை, பார்வையிட்டதுடன், அது தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஏப்ரல் மாதம் மீண்டும் தொடங்கவிருக்கும் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை மேற்கொள்ள சுதந்திரமான மற்றும் வெளிப்படையான செயல்முறையை உறுதி செய்வதற்கான வளத் தேவைகள் குறித்து விவாதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முக்கியப் பணிக்கு ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் தயாராக உள்ளது – என்றுள்ளது.


















