அனர்த்த விழிப்புணர்வு தொடர்பான முன்னாயத்த நிகழ்வு யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தலைமையில் காவேரி கலா மன்றத்தின் அனுசரணையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
அனர்த்தங்களினால் அதிகமாக பாதிக்கப்படுகின்ற இடங்களை மையப்படுத்தி அரச திணைக்களங்கள், பாதுகாப்புப் பிரிவினர், சமூக அமைப்புகளை அழைத்து அவர்களுக்கான முன்னாயத்தமாக இந்தச் செயலமர்வு நடைபெற்றது.
மழை வெள்ளம், இடி மின்னல், சுனாமி தொடர்பான விழிப்புணர்வு முன்னெச்சரிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் இந்தச் செயலமர்வு அமைந்தது.


















