-கஜிந்தன்-
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், வேலணை வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்றது.
தீவக நினைவேந்தல் குழு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசத்தின் குரலின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகைச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.

இதன்போது ஏற்பாட்டுக் குழுவினருடன், ஊர்காவற்றுறை பிரதேச சபையின் உப தவிசாளர் மற்றும் பொதுமக்களும் இணைந்து ஈழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் இராஜதந்திரி அன்ரன் பாலசிங்கத்தின் நினைவுகளை மீட்டி அஞ்சலித்தமை குறிப்பிடத்தக்கது.

















