-கஜிந்தன்-
கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதன்மையாக நாகர் கோவில் பகுதி காணப்படுகிறது.
அக் கிராமத்தில் பணிபுரியும் கிராம உத்தியோகத்தர் பக்க சார்பாக செயற்படுவதாகவும், பாதிக்கப்பட்ட சில வீடுகளை கிராம உத்தியோகத்தர் வந்து பார்வையிடவில்லை எனவும் நாகர் கோவில் மக்கள் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
இவ்வாறு கருத்து தெரிவித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு மூலம், ஊடகங்களுக்கு கொடுத்த கருத்தினை மறுபடியும் வாபஸ் வாங்குமாறும், இல்லை என்றால் ஆள் வைத்து கொலை செய்வேன் என்று உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர், குறித்த கிராம சேவகருக்கு எதிராக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















