குறிகாட்டுவானுக்கும், நயினாதீவுக்கும் இடையில் மீண்டும் கடற்பாதை சேவையை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் புதிய கடற்பாதைக்காக உபகரணங்கள் குறிகாட்டுவான் பகுதிக்கு கனரக வாகனங்கள் மூலம் எடுத்துவரப்பட்டன.
குறிகாட்டுவானுக்கும், நயினாதீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்ட கடற்பாதை நீரில் மூழ்கியமையால் கட்டடப் பொருட்கள் மற்றும் வாகனங்கள் என்பவற்றை நயினாதீவுக்கு கொண்டு செல்வதற்கு பல இன்னல்கள் காணப்பட்டது.
பயணிகள் சேவையில் ஈடுபடும் படகுகளிலும், படகுகளை வாடகைக்கு அமர்த்தியும் மக்கள் பொருட்களை எடுத்து சென்று வந்த நிலையில் கடற்பாதை சேவையை மீண்டும் மக்கள் கோரிவந்தனர்.
இந்நிலையில் குறிகாட்டுவான் பகுதிக்கு கடற்பாதை உபகரணங்கள் எடுத்து வரப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நேரில் சென்று பார்வையிட்டார்.















