-பா.பிரதீபன்-
வடமராட்சி, கரணவாய்ப் பகுதியில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய சூழலை பேணிய ஆதன உரிமையாளர்கள் 9 பேருக்கு 72 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கரணவாய் பொதுச் சுகாதாரப் பிரிவில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது நுளம்பு பெருகக் கூடியவாறு சூழலை வைத்திருந்த 9 ஆதன உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கரணவாய் பொதுச்சுகாதார பரிசோதகர் சு.புவீந்திரனால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட அனைத்து ஆதன உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் அவர்களுக்கு மொத்தமாக 72 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது.
















